தற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்? | Kalvimalar - News

தற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?ஏப்ரல் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக பாங்க் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளச் செல்வோர் பாங்கிங் துறையின் அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்தியாவில் பாங்கிங் துறையானது செயல்படும் விதம், எவை பொதுத் துறை பாங்குகள், எவை தனியார் துறை பாங்குகள், பிற பாங்குகள் என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் போன்ற தகுதிகளைப்
பெற்றவருக்கு பாங்கிங் துறையிலிருந்து கொஞ்சம் ஆழமான கேள்விகள் கேட்கப்படலாம்.


அடுத்ததாக நீங்கள் படித்திருக்கும் பட்டப்படிப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்(நீங்கள் பி.காம்., என்பதால் இது காமர்ஸ்/அக்கவுன்டன்சி/பாங்கிங் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமையலாம்). எந்தப் பணிக்குச் செல்வோரிடமும் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகளிலிருந்து கேட்கப்படும் கேள்விகள். இவற்றுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு வந்தபின் தயாராக முடியாது. செய்தித்தாள் வாசிப்பது மிக அவசியம். மேலும் ஜி.கே.டுடே போன்ற பொது அறிவு மாதப் பத்திரிகைகளையும் கட்டாயம் தொடர்ந்து படிக்க வேண்டும்.


இது தவிர கேட்கப்படும் கேள்விகள் உங்களைப் பற்றியதாக இருக்கும். இதில் பின்வரும் கேள்விகள் இடம் பெறுகின்றன.

  • சுய அறிமுகம் மற்றும் குடும்ப பின்னணி பற்றிக் கூறவும்
  • நீங்கள் இந்த வேலைக்கு எப்படி பொருத்தமானவர் என நினைக்கிறீர்கள்? (அல்லது) எதற்காக உங்களுக்கு இந்த வேலை தரப்பட வேண்டும்?
  • உங்களது பொழுது போக்கு என்ன? (சொல்லப்படும் பதிலிலிருந்து கேள்விகள் அமையும்).
  •  படிப்பு முடித்தபின் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
  • உங்களுக்கு இந்த வேலை கிடைத்தபின் இதை விட நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிடுவீர்களா?
  • இந்த வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
  • உங்களது எதிர்கால லட்சியம் என்ன?
  • உங்களது ரோல் மாடல் யார்? ஏன்?
  • அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் இந்த நிறுவனத்தில் என்ன நிலையில் இருப்பீர்கள்?
  • இந்த நிறுவனத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
  • உங்களது தந்தை/கணவர்/மனைவி செய்யும் வேலை என்ன? அதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
  • உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லவும்.
    இது போன்ற கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில்களை தயார் செய்து கொண்டு செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us