கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா? | Kalvimalar - News

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா? ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகளில் பி.ஓ., கிளார்க் பணிகளுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகமாக அறிவிக்கப்படுவதை அறிவீர்கள். இந்த ஆண்டும் இதே நிலை தொடரும் என்று துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோராயமாக இந்த ஆண்டு 40 ஆயிரத்துக்கும் மேலான அனைத்துப் பிரிவு பணியிடங்கள் அறிவிக்கப்படலாம்.


வங்கிகளில் தற்போது மாதம் ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை சம்பளம் பெறும் கிளார்க்குகள் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்பட்டால் 10 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம் என்பதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடிப்பவர்
களுக்கு வங்கித் துறை சிறப்பான வேலையைத் தருவதாகவே அமையும்.
எனவே ஆண்டு முழுவதும் அறிவிக்கப்படும் வாய்ப்புகளுக்கேற்ப இப்போதிருந்தே தயாராகத் துவங்குங்கள். 2010ம் ஆண்டின் முடிவிற்குள் அரசு வங்கி ஊழியராகும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக கிடைத்திடும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us