பட்டப்படிப்பு படிக்கும் போதே போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல நினைப்பது மிக ஆரோக்கியமான அம்சம். அதற்காக சிறப்புப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதென்பது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு தான். ஆனால் அந்த வகுப்புகள் முடிவடைந்த பின் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வது என்பது உங்களது கைகளில் தான் உள்ளது. உங்களது பட்டப்படிப்புப்புக்காக நீங்கள் என்ன 24 மணி நேரமும் படித்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எவ்வளவு மணி நேரம் ‘டிவி’, கம்ப்யூட்டர், மொபைல் பேச்சு என்பதில் கழிகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். டைம் மேனேஜ்மென்டில் புத்திசாலித்தனமாக விளங்கும் இளைஞர்களால் ஒரே நேரத்தில் படிப்பு, போட்டித் தேர்வு, அடுத்தவருக்கு உதவுவது என்று எத்தனையோ ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட முடிகிறது. இன்னமும் கூட காலம் கழியவில்லை. எனவே படிப்போடு சேர்ந்தே போட்டித் தேர்வுகளிலும் நீங்கள் மிளிர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்று அதற்கேற்ப தயாராகுங்கள்.