திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
படிப்பு: பிஎச்.டி., முழுநேர படிப்பு
தகுதிகள்: எம்.பில், அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பல்கலைக்கழகத்தால் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது நெட், செட், ஜே.ஆர்.எப்., கேட் போன்ற ஏதேனும் ஒரு தேசிய அளவிலான தேர்வில் உரிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
துறைகள்: தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், வணிகம், கல்வி, மேலாண்மைக் கல்வி, தொடர்பியல், உடற்கல்வி, நூலகம் மற்றும் தகவல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், சுற்றுப்புற அறிவியல், பயோடெக்னாலஜி, மரைன் பயோடெக்னாலஜி, ஜியோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, அனிமல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைக்காலஜி உட்பட 29 துறைகள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29.
விபரங்களுக்கு: www.msuniv.ac.in