ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறத. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இருளர் (வில்லி மற்றும் வேட்டைக்காரன்) இன மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.