தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு, எம்.ஏ., பட்டமேற்படிப்பு, பி.ஜி.டி.எல்.ஏ., முதுநிலை மாலை நேர டிப்ளமா படிப்பு, டி.எல்.எல். ஏ.எல்., வார இறுதி டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, வரும், 23ம் தேதி மாலை, 4:00 மணி வரை விண்ணப்பிக்க, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 98841 59410, 044 -- 2844 0102, 2844 5778 என்ற, எண்களை தொடர்பு கொள்ளலாம்.