சென்னை: வரும் கல்வி ஆண்டில், சத்யபாமா பல்கலையில் சேர விரும்புவோருக்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள, சத்தியபாமா பல்கலையில், பி.இ., -- பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும், பி.டிசைன் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்த கல்வி ஆண்டில், இந்த பல்கலையில் சேர விரும்பினால், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, சத்யபாமா பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் நுழைவுத்தேர்வு, ஏப்., 14 முதல், 19 வரை, ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் துவங்கியுள்ளன. கூடுதல் தகவல்களை, www.sathyabama.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.