இதுபோன்ற ஆசைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நியாயமானதாக இருந்தன. ஆனால் உலகமயமாக்கலுக்குப் பின் நமது கல்வி மேம்பாடு பெறத் தொடங்கிய பின் இந்தியக் கல்வியை நாடி வரும் வெளிநாட்டினர் அதிகமாகயிருப்பதால் வெளிநாட்டுக் கல்வி அவசியமா என்பது தான் முதலில் உங்களுக் கான கேள்வியாகும்.
இந்தியாவின் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள், எக்ஸ்.எல்.ஆர்.ஐ., என்.ஐ.டி., போன்ற அகில இந்திய தொழிற்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்புகள் உலகத் தரம் வாய்ந்தவையாகவும் மிகச் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தருவதாகவும் இருப்பதால் இன்று வெளிநாட்டு எம்.பி.ஏ., என்பது குறிப்பிட்ட சிலரைத் தவிர பிறருக்கான கவர்ச்சியான அம்சமாக விளங்கவில்லை.
ஆனால் குடும்பச் சூழல், உங்களது அடிப்படை ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் ஆஸ்திரேலிய கல்வியை நாடினால் அது தவறில்லை. இதற்காக நீங்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். பின்பு நேர்முகத் தேர்வுகளிலும் தகுதி பெற வேண்டும். அதன் பின் ஆஸ்திரேலிய கல்வி கிடைத்தால் நிச்சயம் அது உங்களுக்கு பன்னாட்டு வேலை வாய்ப்புகளைத் தரும் என்பதில் ஐயமில்லை.