பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் தான் உங்களது தகுதிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவற்றுக்குப் பொதுவாகவே ஒரு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு உங்களது அடிப்படை தகவல் தொடர்புத் திறன், ஆங்கிலத் திறன், பகுத்தாராயும் திறன், பொது அறிவு, பாடத் திறன் ஆகியவை அறியப்பட்டு உங்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தரப்படுகிறது. அதிலும் நீங்கள் தகுதி பெற்றால் தான் இப்பணிகளில் சேர முடியும்.