கோவை: வேளாண் பல்கலை முதுகலை மற்றும் பி.எச்டி., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம் வாயிலாக எட்டு கல்லுாரிகளில், 32 துறைகளில், முதுகலை; 28 துறைகளில், பிஎச்.டி., பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கான முதுகலை, பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை நேற்று துவங்கியது.
இந்த பல்கலையில் முதுகலை பிரிவில், 400, பிஎச்.டி., படிக்க 200 இடங்கள் உள்ளன. மாணவர்கள், https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு, pgadmission@tnau.ac.in என்ற இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம்.