சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒரு வாரத்தில், 82 ஆயிரம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில் சேர, ஆன்லைன் வழியே கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இம்மாதம், 20ம் தேதி கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. நேற்று மாலை நிலவரப்படி, ஒரு வாரத்தில் 82 ஆயிரத்து 327 பேர் விண்ணப்பம் பதிவு செய்துஉள்ளனர்.
அவர்களில், 43 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 19 ஆயிரம் பேர் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைன் வழியில் பதிவேற்றம் செய்துள்ளதாக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் குழு தெரிவித்துள்ளது.