சென்னை: மாணவ - மாணவியர், 6.18 லட்சம் பேருக்கு, மூன்று மாதங்களுக்குள் இலவச சைக்கிள் வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பிளஸ் ௧ வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மார்ச் 3ம் தேதி &'டெண்டர்&' விடப்பட்டது.
தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு சார்பில் விலை குறைப்பு பேச்சு நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.