அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு கடுமையான போட்டியை உள்ளடக்கியது. இத்தேர்வில் உயிரியல், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம், ரீசனிங் ஆப்டிடியூட் ஆகிய பகுதிகளில் அப்ஜக்டிவ் கேள்விகள் இடம் பெறுகின்றன.
முற்றிலும் இலவசமான படிப்பு என்பதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சென்ட்ரல் பள்ளிகள், ராணுவ பள்ளிகள், பல கல்வி முறைகளைக் கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இதில் சேர துடிப்புடன் தயாராகி வருகிறார்கள். சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனத்தில் சேர்ந்து இதற்கு தயாராவது உறுதியான வெற்றியைத் தரும். குறைந்தது ஓராண்டாவது இத்தேர்வுக்காக முனைப்புடன் தயாராக வேண்டும்.