சென்னை: பள்ளி, கல்லுாரிகளில், வரும், 25ம் தேதி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
தேசிய வாக்காளர் தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 25ல், நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், &'வரும், 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் என்பதால், மாணவர்கள் மத்தி யில், ஓட்டு போடுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். &'வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்&' என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.