சென்னை: ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கைக்கான, அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாட திட்டங்களிலும், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மத்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பில் சேர, இரண்டு கட்ட நுழைவு தேர்வு எழுத வேண்டும்.முதற்கட்ட, ஜே.இ.இ., பிரதான தேர்வு ஜனவரியில் நடந்தது; அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இரண்டாவது பிரதான தேர்வு, ஏப்ரலில் நடக்க உள்ளது.
இரண்டு முறை நடத்தப்படும் இந்த தேர்வுகளில், ஏதாவது ஒரு முறை மட்டும் தேர்வு எழுதினாலே, அதன் மதிப்பெண் அடிப்படையில், அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில், டில்லி ஐ.ஐ.டி., வாயிலாக, அட்வான்ஸ்ட் தேர்வு நடத்தப்படுகிறது. மே, 17ல் இந்த தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, டில்லி ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.