முதலில் நீங்கள் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விளையாடியிருக்கும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கிரிக்கெட்டின் அடிப்படை விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். தவிர, உங்களது அமைவிடத்துக்கு அருகில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினால் தான் நடைமுறை அம்பயரிங் திறன்களைப் பெற முடியும்.
ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அசோஷியேஷனும் அம்பயரிங் திறனறியும் தேர்வை நடத்துகிறது. மாவட்டப் போட்டிகள், மாநிலப் போட்டிகள் என அம்பயரிங் பணியாற்றும் போது தான் டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள் என அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும்.