சிபிஐயில் பணி புரிய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

சிபிஐயில் பணி புரிய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்? செப்டம்பர் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சி.பி.ஐ., தான் இந்தியாவின் முதன்மையான  புலனாய்வு நிறுவனம் என்பதை அறிவீர்கள். இன்டர் போல் எனப்படும் பன்னாட்டு புலனாய்வு நிறுவனத்தின் இந்திய பணிகளைப் சிபிஐ தான் மேற் கொள்கிறது. அதாவது பன்னாட்டு குற்றங்களை புரிந்தவரின் இந்திய தொடர்புகள் போன்ற சம்பந்தப்பட்ட தகவல்களைத் திரட்டி குற்றங்களை இந்தியாவில் தடுப்பது சிபிஐ தான். எனவே இதன் பணிகளுக்கு நீங்கள் முயலுவது மிக நல்ல முடிவே.

இதில்

- ஸ்பெஷல் டைரக்டர் (அடிஷனல் டைரக்டர்)

- ஜாயிண்ட் டைரக்டர்

- டெபுடி இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்

- டெபுடி சூப்பிரண்டண்ட் ஆப் போலீஸ்

- இன்ஸ்பெக்டர்

- சப் இன்ஸ்பெக்டர்

- அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர்

- ஹெட் கான்ஸ்டபிள்

- கான்ஸ்டபிள்

என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன.

சிபிஐயில் நுழைய 2 வழிகள் உண்டு.

- இந்தியன் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக இதில் நுழைவது ஒரு வழி. அதாவது தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய அரசே உங்களை டெபுடேஷன் அடிப்படையில் சிபிஐக்கு அனுப்பலாம். இதை யுபிஎஸ்சி நடத்துகிறது.

அல்லது சிபிஐ அறிவிக்கும் போது தேர்வுக்கு விண்ணப்பித்து சப் இன்ஸ்பெக்டராக இதில் நுழைவது. இந்தத் தேர்வை எஸ்.எஸ்.சி., நடத்துகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us