மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் தன்னாட்சி அமைப்பு தான் டி.ஓ.இ.ஏ.சி.சி. என்பதை அறிவீர்கள். இது 4 நிலைகளில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்புகளைத் தருகிறது. ஏ நிலை என்பது புரொகிராமர் திறன்களைப் பரிசோதிப்பது. இது முதுநிலை டிப்ளமோவுக்குச் சமமானது.
பி நிலை என்பது பட்டப்படிப்புக்குச் சமமானது. இது சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்/சாப்ட்வேர் டிசைனர்/இன்ஜினியர் பணிகளுக்குச் சமமான தகுதியைத் தருகிறது. சி நிலை என்பது பட்ட மேற்படிப்புக்குச் சமமானது.
எம்.டெக்.,குக்குச் சமமான சிஸ்டம்ஸ் மேனேஜர் தகுதியைத் தருகிறது. இதில் பி நிலை தகுதி பெற்றால் இன்ஜினியரிங் நிலையிலான அரசுப் பணிகளுக்குச் செல்லலாம்.