பி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா? | Kalvimalar - News

பி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா?செப்டம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

குறைந்தபட்ச தகுதியாக ஒரு பட்டப்படிப்பை முடித்துள்ள நீங்கள் தற்போதைய வேலைச் சூழலை கட்டாயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் பட்டப்படிப்புகள் முடிப்பவருக்கு தற்போதைய சூழலில் வேலைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிறப்புத் திறன்களை பெறுபவரே வெற்றி பெற முடிகிறது.

சி.ஏ.., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., சிறப்பு கம்ப்யூட்டர் தகுதிகள், ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் போன்ற பல தகுதிகளில் ஒன்றை அல்லது கூடுதலான தகுதிகளைப் பெறுபவர்கள் எளிதில் நல்ல வேலைக்குச் செல்லலாம். 

வெறும் பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கான ஒரே வழி போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்வது தான். பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கும் இதே தான் நிலை. இலக்கை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us