பிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும். | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கிட்டத்தட்ட சேர்க்கை முடிந்துள்ள இந்த நிலையில் உங்களது கேள்வி உங்களது குழப்பமான மன நிலையையும் உங்களது ஏழ்மையான குடும்பச் சூழலையும் காட்டுகிறது. இன்று ரீடெயில் துறை எண்ணற்ற வாய்ப்புகளைத் தரும் துறையாக இருப்பதை அறிவோம். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இத் துறையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக இருக்கின்றன.

எனினும் இத் துறையில் உருவாகவிருக்கும் பெரும்பாலான வேலைகளில் சேர இத் துறை படிப்பை முடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையும் இதற்கு இணையானது தான்.

எனினும் படிக்கும் நிறுவனத்தைப் பொறுத்தே உங்களுக்கான வேலை உத்தரவாதம் கிடைக்கிறது. எனவே உங்களது கல்லூரியை தேர்வு செய்வதில் கவனம் தேவை. ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற உங்களது மொழித் திறன், பேச்சுத் திறன் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்வது கட்டாயம். 2 துறைகளில் இத் துறை உங்களது சூழலுக்கு அதிகமாகப் பொருந்துவதாகவே கருதுகிறோம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us