ஜிமேட் எதற்காக? | Kalvimalar - News

ஜிமேட் எதற்காக?டிசம்பர் 09,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., மற்றும் மேலாண்மை துறையில் முதுநிலை டிப்ளமா படிப்புகளை படிக்க ஜிமேட் எனும் கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட் எழுவது சிறந்தது!




சிறப்பம்சங்கள்




* மேலாண்மை படிப்புகளுக்காக 60 ஆண்டுகளாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு


* எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 10ல் 9 பேர் எழுதும் தேர்வு


* ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் எழுதும் தேர்வு


* சர்வதேச அளவில் 7 ஆயிரம் எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் தேர்வு 


* உலக அளவில் 110 நாடுகளால், 2,300 கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


* 114 நாடுகளில் 650 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.




தகுதி


கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் (ஜி.எம்.ஏ.சி.,) மூலம் நடத்தப்படும் ஜிமேட் தேர்வுக்கு, எவ்வித வயது வரம்போ, சிறப்புத் தகுதிகளோ தேவை இல்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.




தேர்வு பகுதிகள்


இத்தேர்வில் மாணவர்களது, அனலட்டிக்கல் ரைட்டிங் அசெஸ்மெண்ட், இன்டெக்ரேட்டர்டு ரீசனிங், குவாண்டிடேடிவ் ரீசனிங் மற்றும் வெர்பல் ரீசனிங் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படுகிறது.  இவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பெரும்பாலான புகழ்பெற்ற சர்வதேச வணிகக் கல்வி நிறுவனங்கள்,  மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குகின்றன. 




3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும் ஜிமேட் தேர்வில், 800 மதிப்பெண்கள் வரை மாணவர்கள் எடுக்க முடியும், இருப்பினும் 710 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் தான் சிறந்த வணிகக் கல்லூரிகளில் சேர்க்கை பெற முடியும்.




ஜிமேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இந்தியாவில் 25 மாநிலங்களில், ஜிமேட் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் உள்ளன.




விபரங்களுக்கு: www.mba.com , www.gmac.com



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us