பொதுவாக ஆங்கில இலக்கியத்தை விருப்பப்பட்டுப் படிப்பவர்கள் அதிகம் இல்லைஎன்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதைப் படிக்க நினைப்பவர்கள் கட்டாயம் அந்தபடிப்பின் மீது ஆர்வம் இருப்பவராகத் தான் இருப்பதைக் காண்கிறோம்.
நவீன சூழலின் தேவையை கருத்தில் கொண்டு பிசினஸ், காமர்ஸ், விசுவல் கம்யூனிகேசன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளி கேசன்ஸ் ஆகியவற்றின் அடிப்படை அம்சங்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் கோயம்புத்தூரிலுள்ள டாக்டர்.ஜி.ஆர்.டி. காலேஜ் ஆப் சயின்ஸ் புதிய ஆங்கில இலக்கியப் படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இன்றைய கடுமையான போட்டிச் சூழலுக்கு ஏற்ற நிர்வாக மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை இளைஞர்களுக்குக் கற்றுத் தருவதாக இந்தப் படிப்பு வரையறுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் கருதுகிறது.
பி.பி.ஓ., கால் சென்டர் பணிகளுக்கும் இது மிகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பில் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.