பி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா?
ஏப்ரல் 27,2008,00:00 IST
21
ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த துறை என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கருதப்பட்ட பயோடெக்னாலஜி துறை இப்போது இதே உற்சாகத்தோடு பேசப்படவில்லை. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., கால் சென்டர், பி.பி.ஓ. என ஐ.டி சார்ந்த பல புதிய பணிகள் உருவான பின்பு, பயோடெக்னாலஜி படிப்பை பலர் படிக்க விரும்புவதும் குறைந்திருக்கிறது. பி.எஸ்சி. பயோடெக்னாலஜி முடிப்பவருக்கு தொடக்கத்தில் 8000 ரூபாய் தான் சம்பளமாகத் தரப்படுகிறது. 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றபின் இது 20,000 ரூபாயாக உயருகிறது.
ஆனால் ஐ
.டி., கம்ப்யூட்டர் படிப்புகளை முடிப்பவருக்கு தொடக்கத்திலேயே 20,000 முதல் 30,000 வரை சம்பளம் தரப்படுகிறது.
டி
.என்.ஏ., ஆர்.என்.ஏ., ஜீன் சீக்வன்சிங், மைக்ரோ அர்ரே, நானோ டிவைசஸ், ஹைத்ருபுட் ஸ்கிரீனிங் என பயோடெக்னாலஜி படிப்பானது அதில் ஆர்வத்துடன் சேருபவருக்கு ஆர்வத்தை மேலும் மேலும் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் பயோடெக்கைப் பொறுத்தவரை அதில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கே சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பி.எச்டி. முடித்தால் இன்னமும் சிறப்பான வாய்ப்புகள் தரப்படுகின்றன. இப்படி மேற்படிப்புகள் படித்து முடிப்பதற்குள் பாதி வயது ஓடி விடுகிறது. எனவே தான் இத் துறையை பலர் இன்று விரும்பவில்லை. எனவே பயோடெக் துறையில் பட்டப்படிப்பையே எடுத்துவிட வேண்டுமென இப்போது ஒரு கருத்து உலவுகிறது.