என் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.பிப்ரவரி 14,2013,00:00 IST
உண்மையிலேயே, இது ஒரு நெருக்கடியான சூழல்தான். டெல்லி பல்கலையில் எம்பிஇ படித்தவருக்கு, வருடத்திற்கு 5 முதல் 8 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதேசமயம், பி.ஓ பணியில் சேர்வதென்பது, உடனடியாக வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழி. இந்தப் பணியில் சேர்ந்தபின்பு, சில வருடங்கள் கழித்து ஒருவருட எம்பிஏ அல்லது எக்சிகியூடிவ் எம்பிஏ போன்ற படிப்புகளை மேற்கொண்டு உங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம்.