பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா?அக்டோபர் 24,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பயோடெக்னாலஜி துறையின் வேலை வாய்ப்புகள் பட்டப்படிப்பு முடிப்பவரை விட, பட்ட மேற்படிப்பு முடித்து ஆய்வுக்குச் செல்பவருக்குத்தான் அதிகம் இருக்கிறது.

படிக்கும் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்டால் பிரச்னை இல்லை. நீங்களே குறிப்பிட்டிருப்பது போல சராசரியாகப் படிப்பவர் என்பதால் எம்.எஸ்சி., படிப்பதன் மூலமாக மட்டுமே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மாற்று வழியாக போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பாக தயார் செய்து, வெற்றி பெற முயற்சிக்கலாம்.

எம்.எஸ்சி.,யையும் சுமாராகப் படித்து, பாடத்தில் நல்ல திறன் பெறாமல் முடிக்கும் போது பயோடெக்னாலஜி துறையில் வேலை கிடைப்பது கடினம். இதை மனதில் கொண்டு முடிவு செய்யுங்கள். இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள்தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us