சேவை நோக்கோடு மட்டுமே படிக்கும் படிப்பு என்பது ஒருவகை. வேலை வாய்ப்புக்காக படிக்கும் படிப்பு என்பது இன்னொரு வகை.
சுற்றுச்சூழல் தொடர்பான படிப்புகள் என்று தனியாக இந்தியாவில் எதுவும் இல்லை. அதேசமயம், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில்(பி.எஸ்சி மற்றும் எம்எஸ்.சி) தாவரவியல் எடுத்துப் படித்து, எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆராய்ச்சி நிலைகளில் சுற்றுச் சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் தொடர்பான மேல்நிலை ஆய்வுக்கு, பல நிறுவனங்கள் நிதியுதவி செய்கின்றன. வேலை வாய்ப்பு என்று எடுத்துக்கொண்டால், முனைவர் பட்டம் முடித்தப்பிறகு, இந்தியாவை விட, வெளிநாட்டில் மிகவும் அதிகம்.