தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும். | Kalvimalar - News

தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும். ஜூன் 22,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியருக்கான பணி வாய்ப்புகள் இருப்பது உண்மைதான். எனினும் சமீப காலத்தில் இது மிகக் குறைவாகவே இருக்கிறது. நல்ல திறனும் தகுதியும் பெற்றவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்புகளைப் பெற சென்னையிலுள்ள ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் என்னும் மையத்தில் நீங்கள் உங்களது தகுதி மற்றும் அனுபவத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த மையமானது தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவது. இதன் கட்டணங்கள் மிகவும் குறைவானவை. இதில் பதிவு செய்து கொண்டால், எந்த நிறுவனத்தின் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றிய முழு தகவல்களையும் அறிந்த பின்னரே உங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. முழு விபரங்களையும் அறிய பின்வரும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

OVERSEAS MANPOWER CORPORATION
41 McNICHOLAS ROAD
CHETPET
CHENNAI 600 031.
Email:
omc@md4.vsnl.net.in
www.omcmanpower.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us