சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 24 நாட்களின் முடிவில், வராதோர் எண்ணிக்கை 22828 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இந்த 24 நாட்களில், அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96998. அதில் இடம் பெற்றவர்கள் 73901. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 268.
24ம் நாளான ஆகஸ்ட் 6ம் தேதி மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6630. அதில் இடம் பெற்றவர்கள் 4777. வராதவர்கள் 1837 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 16 பேர்.
நாளுக்கு நாள் வராதோர் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது. இது கடந்தாண்டைவிட அதிகமாக உள்ளது. 24ம் நாளில் மட்டும் வராதோர் சதவிகிதம் 27.71% என்ற அளவில் இருந்தது.