நமது நாட்டில் 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்டது. வழக்கறிஞர்களுக்கான நடத்தை, விதிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்துவது இந்த அமைப்புதான். சட்டப் படிப்புகளை முடித்தவர்கள், மாநிலங்களில் உள்ள பார் கவுன்சில்களில் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதன் பிறகே அவர்கள் வழக்கறிஞராகத் தொழிலை மேற்கொள்ள முடியும். சட்டக் கல்வி தொடர்பான விஷயங்களைக் கவனிக்க தனிக் குழுவையும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.barcouncilofindia.nic.in