நாட்டில் ஆசிரியர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் டெல்லியில் 1995-இல் ஏற்படுத்தப்பட்டது. புதிதாகத் தொடங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் பணியையும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் செய்து வருகிறது. பெங்களூர், போபால், புவனேசுவரம், ஜெய்பூர் ஆகிய இடங்களில் இந்தக் கவுன்சிலின் மண்டல கமிட்டி அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு www.ncte-in.org