கி.பி.1806ம் ஆண்டில் ஜெர்மன் மருத்துவரான ஹனிமேன் உலக சமுதாயத்துக்கு அளித்த மிகச் சிறப்பான மருத்துவ முறை ஓமியோபதி. பாதுகாப்பான மற்றும் விரைவான தீர்வை நமது நோய்களுக்கு அளிக்கும் முறையாக ஓமியோபதி அறியப்படுகிறது.
பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக இம் மருத்துவத்தால் பயன்பெறுவாரால் பல ஆண்டுகளாக உணரப்படும் முறை ஓமியோபதி. குறிப்பிட்ட சில மாதங்களுக்கும் சில ஆண்டுகளுக்கும் இம் மருத்துவத்தை எடுத்துக் கொள்பவருக்கு மீண்டும் அந்த நோய் வராமலிருப்பதையும் நாம் காண முடிகிறது. செடிகள், மினரல்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் அடிப்படை மருத்துவப் பொருளானது டைல்யூட் செய்யப்பட்டு சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.
பிளஸ் 2 முடித்துவிட்டு 4 ஆண்டு ஓமியோபதி படிப்பை நீங்கள் மேற்கொண்டு அதில் சிறப்பான திறன் பெற்றால் ஒரு சிறப்பான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.