சுவாமி தயானந்த் கல்வி அறக்கட்டளை, பொறியியல், கட்டடக்கலை, மருத்துவம், மென் பொறியியல் மற்றும் மருந்தியல் ஆகிய துறைகளில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: ஐ.ஐ.டி., அல்லது என்.ஐ.டி.யில்., ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மருத்துவம், கட்டடக்கலை மற்றும் மருந்தியல் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில், சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: ரூபாய் 15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வழங்கப்படும். உதவித்தொகையில், 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31
விபரங்களுக்கு: