இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மேலாண்மை, நர்சிங் மற்றும் பி.எட்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்: ஹூமென் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பினான்சியல் மேனேஜ்மெண்ட், ஆப்ரேஷனல் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பினான்சியல் புராஜெக்ட் ஆகிய மேலாண்மை பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள், பி.எஸ்சி.,-நர்சிங் மற்றும் பி.எட்.,
தகுதிகள்
மேலாண்மை படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.எட்., படிப்பிற்கு, அறிவியல், சமூக அறிவியல், கணிதம், வணிகவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு மதிப்பெண் தளர்வு உள்ளன.
பி.எஸ்சி.,-நர்சிங் படிப்பிற்கு, ‘டிப்ளமோ இன் நர்சிங்’ படித்து, தற்போது செவிலியராக பணியாற்றிக்கொண்டிருக்க வேன்டும்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 11
விபரங்களுக்கு: