கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா? | Kalvimalar - News

கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா?பிப்ரவரி 15,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


பொதுவாக பகுதி நேரமாகப் பணி புரிந்து கொண்டே படிக்கலாம் என்பது மாணவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு செயல் தான். ஆனால் இதில் உள்ள ஒரே ரிஸ்க் என்னவென்றால் படிக்கும் போதே சம்பாதிக்க முடிவதால் அந்த உபரிபணம் தரும் ஆர்வத்தால் படிப்பின் மீதான உங்களது ஆர்வமும் நம்பிக்கையும் குறைந்து விடக்கூடும். 200க்கும் 300க்கும் மார்க்கெட்டிங் பணிகளைப் பார்த்து விட்டு ஏராளமாகப் பணம் செலுத்தி சேர்ந்துள்ள படிப்பை கோட்டை விட்டுவிடக் கூடாது.

 

உங்களது குடும்பம் உங்களது வருமானத்தை இப்போது நம்பியிருக்கும் கட்டாயச் சூழல் என்றால் கூட இதை மேற்கொள்ளலாம். படிப்பின் மீது உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருப்பதும் அதனால் மாற்று வழிகளில் ஈடுபட நீங்கள் உங்களையே சமாதானம் செய்து கொள்வதற்காக இது போன்ற பணிகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் தான் உங்களது கடிதம் காட்டுகிறது. எனவே உங்களது முழு கவனமும் 3 ஆண்டுகளுக்கு படிப்பிலும் மென்திறன்களை வளர்ப்பதிலுமே இருக்கட்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us