தொலைநிலைக் கல்வி | Kalvimalar - News

தொலைநிலைக் கல்வி

எழுத்தின் அளவு :

தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கால அளவு: இரண்டு ஆண்டுகள்.

பயிற்றுமொழி: தமிழ்

தகுதிகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பயன்பாடுக் கணிதம், உயிர் இயற்பியல், பயன்பாடு இயற்பியல், புவி இயற்பியல், மின்னணுவியல், உயிர் நுட்பவியல், தாவர உயிரியல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பொருளியல், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், இந்திய பண்பாடு, உளவியல், தர்க்கவியல் மற்றும் தத்துவவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தது, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவத்துடன், அரசு அல்லது அரசு ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் தற்போது ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருப்பதும் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 16

விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us