புள்ளியியல் துறையில் ஆர்வமா? | Kalvimalar - News

புள்ளியியல் துறையில் ஆர்வமா?

எழுத்தின் அளவு :

மத்திய அரசின்கீழ், சென்னை, டில்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் செயல்படும், இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம், 2017-18ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இளநிலை படிப்புகள்: பி.சேட்., மற்றும் எம்.சேட்.,

தகுதி: கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்: பல்வேறு பிரிவுகளில் எம்.சேட்., எம்.மேத்., எம்.எஸ்., எம்.டெக்., பிஎச்.டி., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ப கணிதம், புள்ளியல், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு பாடத்துடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 10

விபரங்களுக்கு: www.isichennai.res.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us