பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிவதற்கும், ஆய்விற்கான உதவித்தொகை பெறுவதற்கும் எழுத வேண்டிய தகுதித் தேர்வான, ‘நெட்’ தேர்வு அறிவிப்பை சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: ஆய்வு உதவித்தொகை பெற வயது 28க்குள் இருக்க வேண்டும். எனினும் அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வும் உண்டு. உதவி பெராசிரியர் பணியிடத்திற்கு வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதிகள்: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16
மேலும் விவரங்களுக்கு: