நீங்களும் மத்திய அரசு பொறியாளர் ஆகலாம்! | Kalvimalar - News

நீங்களும் மத்திய அரசு பொறியாளர் ஆகலாம்!

எழுத்தின் அளவு :

பொறியியல் பட்டதாரிகள், மத்திய அரசின் பல்வேறு துறைப் பிரிவுகளில் பணிபுரிவதற்கான, அகில இந்திய தகுதித்தேர்வான, பொறியியல் பணித் தேர்வு (இ.எஸ்.இ.,) எழுத விண்ணப்பிக்கலாம்!

சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் போன்ற துறைகளில், குரூப் ‘ஏ’  மற்றும் குரூப்  ‘பி’, பிரிவில் பொறியாளர்களை நியமனம் செய்வதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில் இந்தேர்வை நடத்துகிறது.

வயது வரம்பு: 01.01.2017 தேதி நிலவரப்படி 21-30க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், வயது வரம்பில் தளர்வு உண்டு.

பணியிடங்கள்: இந்தியன் ரயில்வே சர்வீசஸ், சென்ட்ரல் இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமேன்ட் சர்வீஸ், இந்தியன் ஜியோலஜிக்கல் சர்வே இன்ஜினியரிங், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீசஸ், டெலிகாம், இந்தியன் இன்ஸ்பெக்சன் சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குரூப் ‘ஏ’ பிரிவில் உள்ள நேவல் ஆர்மமேன்ட் சர்வீஸ் மற்றும் ரேடியோ ரெகுலட்டரி சர்வீஸ் பணியிடங்களுக்கு வயர்லஸ் கம்யூனிகேஷன், ரேடியோ பிசிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில், எம்.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: எழுத்து, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு
பிரிலிமினரி தேர்வு:
இரு தேர்வு தாள்கள் கொண்ட முதல்நிலை தேர்வில் ‘மல்டிபில் சாயிஸ்’ அடிப்படையில், பொது ஆய்வுகள், பொறியியல் திறனறிவு மற்றும் பணிப்பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாடப்பிரிவு என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்’ முறையில் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை (மெயின்) தேர்வுக்கு தகுதி பெறுவர்.

மெயின் தேர்வு: இரு தேர்வு தாள்கள் கொண்ட இத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு ‘கன்வென்ஷன்’ முறையில் விரிவான எழுத்துத்தேர்வாக நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு: 200 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு நிலைகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஆராயப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 26

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us