மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ( சி.ஐ.சி.டி.,) வழங்கும் முனைவர் பட்ட ஆய்வு மற்றும் முனைவர் பட்ட மேல் ஆய்வு உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
முனைவர் பட்ட ஆய்வு
வயது வரம்பு: செப்.,3ம் தேதி நிலவரப்படி 30 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தகுதிகள்: மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், ஆய்விற்காக பதிவு செய்திருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில், இலக்கியம், மொழியியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், வழக்காற்றியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில், 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் 12 ஆயிரம் ரூபாய் மற்றும் பிற செலவினங்களுக்கு என, ஆண்டு தோறும் 12 ஆயிரம் ரூபாய்.
முனைவர் பட்ட மேல் ஆய்வு
வயது வரம்பு: செப்.,3ம் தேதி நிலவரப்படி 40 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தகுதிகள்: முனைவர் பட்டப்படிப்பில், இலக்கியம், மொழியியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், வழக்காற்றியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் 18 ஆயிரம் ரூபாய் மற்றும் பிற செலவினங்களுக்கு என, ஆண்டு தோறும் 30ஆயிரம் ரூபாய்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 3
மேலும் விவரங்களுக்கு: