ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஆராய்ச்சியாளர்களுக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் போஸ்டு டாக்டோரல் பெலோஷிப்’ அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு  கலை மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவில், பிஎச்.டி., பதிவு செய்திருத்தல் அவசியம். பொது பிரிவினர், இளநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், முதுநிலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு உள்ளது.

திருநங்கைகளும் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்!

உதவித்தொகை: முதலாம் ஆண்டு, மாதம் 38 ஆயிரத்து 800 ரூபாய்; இரண்டாம் ஆண்டு, மாதம் 40 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் மூன்றாம் ஆண்டு, மாதம் 50 ஆயிரம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us