சென்னை: அகில இந்திய அளவில், பல்கலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், 2019 - 2020ம் ஆண்டு பதக்கங்கள் வென்ற 144 பேருக்கு, உயரிய ஊக்கத்தொகை வழங்க, 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், இந்திய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வெல்லும் மாணவர்களுக்கு 3 லட்சம்; வெள்ளி வெல்வோருக்கு 2 லட்சம்; வெண்கலம் வெல்வோருக்கு 1.50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த, 2019 - 20ம் ஆண்டுகளில், பல்வேறு போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த 53 மாணவர்கள் 22 பதக்கங்களையும்; 91 மாணவியர் 27 பதக்கங்களையும் வென்றனர்.
மொத்தம், 144 மாணவர்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க, 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.