MIDAS என்று சுருக்கமாக அழைக்கப்படும் MARG Institute of Design and Architecture, Swarnabhoomi கல்வி நிறுவனம், இயல்பான வாழிட திட்டமிடல் மற்றும் மேலாண்மை(Habitat Planning & Management) என்ற பெயரில், ஒரு முதுநிலை மேலாண்மை படிப்பை, புதிதாக தொடங்கியுள்ளது. இக்கல்வி நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.
இந்த வகையில், இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்படும் படிப்பு இதுதான். இது ஒருவருட காலஅளவைக் கொண்ட ஒரு ஸ்பெஷலைசேஷன் படிப்பாகும்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: கட்டடக்கலை மாற்றத்தின் வழியாக, நீடித்த வளர்ச்சியுடன், ஸ்மார்ட் சிட்டிகளில் ஸ்பெஷலைசேஷன் செய்வதே இந்தப் படிப்பு. நீண்ட ஆய்வுக்குப் பிறகே, இப்படிப்பிற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
ஆற்றல், உள்கட்டமைப்பு, அழகியல், பரந்த வெளி, சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம் மற்றும் குடிமக்களின் நீடித்த மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியதாக இப்படிப்பு அமையும். மேலும், மேற்கண்ட அம்சங்களை எவ்வாறு, ஒரு நகரத்தின் வளர்ச்சியோடு ஒருங்கிணைப்பது என்ற அம்சமும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.