இந்திய ஐ.ஐ.டி.,களில் எம்.பி.ஏ. படிப்பில் சேர விரும்புவோர், 2015ம் ஆண்டு, ஜனவரி 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2 ஆண்டு முழுநேர எம்.பி.ஏ. படிப்புகள், ரெகுலர் மற்றும் இன்டஸ்ட்ரீ-ஸ்பான்சர்டு என்ற முறைகளில் வழங்கப்படுகின்றன.
மும்பை, டில்லி, சென்னை, காரக்பூர், கான்பூர் மற்றும் ரூர்கி ஆகிய இடங்களிலுள்ள ஐ.ஐ.டி.,கள், எம்.பி.ஏ. படிப்பை வழங்குகின்றன.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஐ.ஐ.டி.,க்கும், கடைசித் தேதிக்கு முன்னதாக, தனித்தனியே சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு மேற்கூறப்பட்ட ஐ.ஐ.டி.,களின் வலைதளங்களுக்கு சென்று பார்க்கவும்.