விண்ணப்பங்களை கோருகிறது காமராஜர் போர்ட் லிமிடெட் | Kalvimalar - News

விண்ணப்பங்களை கோருகிறது காமராஜர் போர்ட் லிமிடெட்

எழுத்தின் அளவு :

சென்னையில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான காமராஜர் போர்ட் லிமிடெட் -இல், மொத்தம் 5 வகைப் பணியிடங்களை நிரப்ப, தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பணியிட விபரங்கள்

முதன்மை(chief) மேனேஜர்(டிராபிக்) - 1 பணியிடம்
கம்பெனி செக்ரட்டரி - 1 பணியிடம்
மேனேஜர்(HR) - 1 பணியிடம்
எக்சிகியூடிவ்(சிவில்) - 2 பணியிடங்கள்
Duty அதிகாரி - 1 பணியிடம்

மேற்கண்ட பணிகளில் சேர்வதற்கு, தனித்தனி வயது வரம்பு நிபந்தனைகள் இருப்பதோடு, தேவைப்படும் குறைந்தபட்ச பணி அனுபவ தகுதிகளும் உள்ளன.

ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான கல்வித் தகுதிகள் மற்றும் சம்பள விகிதங்கள் உண்டு.

தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி - டிசம்பர் 31.

விரிவான தகவல்களுக்கு http://www.ennoreport.gov.in/tra.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us