தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியிலுள்ள சுகாதார அலுவலர்(Health Officer) பதவியில், 33 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
B.S.Sc., (Bachelor of Sanitary Science), Diploma in Public Health, Licentiate in Public Health, M.B.B.S, DMS, LMP ஆகிய படிப்புகளில், ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
www.tnpscexams.net என்ற வலைதளம் சென்று, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான எழுத்துத் தேர்வு 2015ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும். இதற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜனவரி 9, 2015.
அனைத்து மேலதிக தகவல்களுக்கும் www.tnpsc.gov.in.