தொலைதூரக் கல்வியில் சேர்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு | Kalvimalar - News

தொலைதூரக் கல்வியில் சேர்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை பல்கலை தொலைதூர கல்வி மையத்தில், 2014 - 15ம் கல்வியாண்டில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் சேருவதற்கான காலக்கெடு, டிச., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை காலக்கெடு, டிச., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர், சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், சென்னை, சேப்பாக்கம், சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு, பல்கலையின், www.unom.ac.in மற்றும் www.ideunom.ac.in என்ற இணையதளம் மற்றும் பல்கலை தகவல் மையத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us