இந்தாண்டு 401 ஸ்காலர்ஷிப்புகளை வழங்கிய பிரிட்டிஷ் கவுன்சில்! | Kalvimalar - News

இந்தாண்டு 401 ஸ்காலர்ஷிப்புகளை வழங்கிய பிரிட்டிஷ் கவுன்சில்!

எழுத்தின் அளவு :

கிரேட் பிரிட்டன் ஸ்காலர்ஷிப்ஸ் - இந்தியா 2015 என்ற திட்டத்தின்கீழ், இந்திய மாணவர்களுக்கு, மொத்தம் 401 ஸ்காலர்ஷிப்களை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில் ஆபரேஷன் டைரக்டர் கில்லியன் கால்டிகாட் இதனை அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப்புகளின் எண்ணிக்கை 750க்கும் மேல். இந்தாண்டு மட்டும் 401 ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம், இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டமாக இது கருதப்படுகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்தின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 1.51 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் ஆகும்.

தகுதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த இந்திய மாணவர்களை ஈர்த்து, அவர்களை, சர்வதேச அங்கீகாரம் வாய்ந்த கல்வித் தகுதியைப் பெற வைக்கும் நோக்கில், இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us