ஆஸ்திரேலிய அரசாங்கம், Endeavour Scholarships and Fellowships என்ற பெயரில், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2015ம் ஆண்டில், மொத்தம் 60 இந்திய மாணவர்களுக்கு அந்த உதவித்தொகை கிட்டியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் 40 இந்திய மாணவர்கள் வரையே இந்த உதவித்தொகையைப் பெற்றனர்.
இந்த உதவித்தொகையின் மூலம், இந்தியர்கள், ஆஸ்திரேலியாவில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்தர ஆராய்ச்சி கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்வதுடன், தங்களது துறையில் நல்ல அனுபவம் பெற்ற திறமையான ஆசிரியர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளையும் பெற முடியும்.
2015ம் ஆண்டிற்காக, மொத்தம் 528 வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை, 2016ம் ஆண்டில் பெறுவதற்கான விண்ணப்ப செயல்பாடு, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவான தகவல்களுக்கு https://internationaleducation.gov.au/scholarships-and-fellowships/about/pages/default.aspx.