சென்னை: தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், ஓராண்டு கணினி டிப்ளமோ படிப்பு, அக்டோபரில் துவங்குகிறது. இப்படிப்பிற்கு ஆக., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை, தண்டையார்ப்பேட்டையில் உள்ள இச்சங்கம் சார்பில், ஓராண்டுக்கான, பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது.
இந்தாண்டு அக்டோபர் முதல், அடுத்தாண்டு செப்டம்பர் வரை நடத்தப்படும் இப்படிப்பில், கணினி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் டிப்ளமோ, மென் திறன், இந்தி பேச்சுத்திறன் ஆகியவை அடங்கும். ஆண்டுக்கு, 15 மாணவர், குறிப்பாக 21 முதல், 40 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும், ஆக., 30ம் தேதிக்குள், தண்டையார்பேட்டை, ரெட்டைகுழி தெருவில் உள்ள சங்கத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 044-2595 5170, 044-2595 6677 மற்றும் 94445 49865 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.