திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகம் தனது மேலாண்மைப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு (KU-MAT 2014)அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தகுதி
ஏதேனும் ஒரு இளநிலைப் பாடத்தில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கேரளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேரலாம். மாணவர்கள் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 30.04.2014
மேலும் கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் (www.keralauniversity.ac.in) இணையதளத்தைக் காணவும்.